பணியை தொடங்கிய NISAR : விண்ணில் இருந்து பூமிக்கு அனுப்பிய முதல் HD படம்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பணியை தொடங்கிய NISAR : விண்ணில் இருந்து பூமிக்கு அனுப்பிய முதல் HD படம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 08:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிக விலையுயர்ந்த NISAR செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 100வது நாளில், உலகை எடுத்த முதல் high-resolution படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பூமி கண்காணிப்புக்கு அப்பால், NISAR எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான களத்தை அமைப்பதால் இது அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியின் தொடக்கம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2015ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, இருந்த காலத்தில் இருநாடுகளும் சேர்ந்து அதிநவீன ரேடார்களுடன் உள்ள செயற்கைக்கோளை வடிவமைத்து விண்ணில் செலுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உலகின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கவும் பருவ நிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் இஸ்ரோ- நாசா கூட்டு முயற்சியில் நிசார் செயற்கைக் கோள் தயாரிக்கும் பணி அதே ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது.

நிசார் செயற்கைக்கோள் வடிவமைப்புப் பணிகள் முழுமையாக முடிய 10 ஆண்டுகளானது. 2,393 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோளை 12,500 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி மாலை 5.40 மணிக்கு நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து GSLV -F 16 ராக்கெட்டில் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.

விண்ணில் பாய்ந்த 19வது நிமிடத்தில் திட்டமிட்டப்படி பூமியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாகச் சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் high-resolution படங்களைப் பூமிக்கு வழங்கும் வகையில் ரேடார்கள் நிசாரில் பொருத்தப் பட்டுள்ளன.

நாசாவின் எல் பேண்டு மற்றும் மற்றும் இஸ்ரோவின் எஸ் பேண்டு என்ற இரட்டை அதிர்வெண்களை பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள் நிசார் ஆகும். நிசாரில் உள்ள 12 மீட்டர் REFLECTOR-யை கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்குள் மெதுவாக விரிக்கப்பட்டு, 9 மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தனது பணியைத் தொடங்கிய இந்தச் செயற்கைக் கோள், பூமியின் நிலம் நீர் மற்றும் பனிப் பரப்புக்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், நிசாரின் S-Band ரேடார், கோதாவரி நதி டெல்டாவை, அங்குள்ள சதுப்புநிலங்கள், வயல்கள், பாக்கு பயிர்கள் மற்றும் மீன்வளர்ப்பு குளங்களைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

குஜராத், அகமதாபாத் மற்றும் இந்தியாவின் வேறுசில இடங்களில் பட அளவுத்திருத்தத்திற்கான reflector களைப் பயன்படுத்தியும், அமேசான் மழைக்காடுகள் வழியாகப் பெறப்பட்ட விண்கலத் தரவுகளைப் பயன்படுத்தியும் துல்லியமான படங்கள் பெறப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல், நிசாரின் S-Band ரேடார் இந்திய நிலப்பரப்பு மற்றும் உலகளாவிய அளவுத்திருத்த-சரிபார்ப்பு தளங்களைத் தொடர்ந்து படம்பிடித்து வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. மழை, இரவு, மேகங்கள் என எந்தக் காலநிலையையும் பூமியைத் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன்கொண்ட இந்தச் செயற்கைக் கோள், விவசாயம், நீர்நிலை மேலாண்மை, கடல்மட்டம் உயர்வு, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

Tags: NisarNISAR begins mission: First HD image sent from space to EarthGSLV -F 16 ராக்கெட்S-Band ரேடார்ISROSciencespace
Share
Tweet
SendShare
Previous Post

தஜிகிஸ்தான் தங்க சுரங்கத்தில் ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் பலி : ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான்- சீன முத்தரப்பு உறவில் விரிசல்!

Next Post

இந்தியா – இஸ்ரேல் கூட்டணி : பொறாமைப்படும் பிற நாடுகள் – தொடங்கிய புதிய சகாப்தம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies