திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
டிட்வா புயல் காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
அதேபோல் காவனூர், கருப்பூர், சூரனூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்கு தண்ணீர் புகுந்ததால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததே மழைநீர் தேங்க காரணமென்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















