இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 28, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி கட்சிகள் செய்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும்,   திமுக அரசைக் கண்டித்தும், இந்து முன்னணி சார்பாக,  புதுச்சேரி திருமங்கலம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருமடம், ஸ்ரீலஸ்ரீ கணேச தேசிக சாமிகள் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தீபப் போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையில், தர்கா அமைந்திருக்கும் இடம், படிக்கட்டு மற்றும் நெல்லித்தோப்பு பகுதி தவிர, மலை முழுவதும் முருகனுக்குச் சொந்தம், திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தம் என்று, 1920 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு கொடுக்கப்பட்டு, வெவ்வேறு காலகட்டத்தில் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் அமைந்திருக்கும் பகுதி, கோவிலுக்குச் சொந்தமானது. இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிசம்பர் 1, 2025 அன்று தீர்ப்பளித்தது என குறிப்பிட்டார்

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தர்கா சார்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. ஆனால், ஆலய வழிபாட்டு முறைகளை உறுதி செய்ய வேண்டிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது என்றும் அவர் கூறினார்.

அது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. G.R.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியலிங்கம் உட்பட, 100 இண்டி கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களது உண்மையான நோக்கம் இந்து மத எதிர்ப்பு மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில், விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. இந்து சமய வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், இந்தி கூட்டணிக் கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தேர்தல் வரும்போது, இந்த துரோகக் கூட்டம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Thiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.hindu munani protestThiruparankundram case.bjp annamalaithiruparankundram newsannamalaibjp annamalai latestannamalai bjpthiruparankundram rowannamalai speechthiruparankundram protestAnnamalai Press Meetthiruparankundram muruganThiruparankundram
ShareTweetSendShare
Previous Post

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம்

Next Post

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது – மத்திய அரசு

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies