17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பினார் தாரிக் ரஹ்மான் - உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!
May 2, 2026, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பினார் தாரிக் ரஹ்மான் – உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு திரும்பிய நிலையில், கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி,லண்டனில் வசித்து வந்தார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், வங்கதேசம் திரும்பினார்.

மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேசத்திற்கு விமானம் மூலம் டாக்கா வந்தடைந்தார். இந்நிலையில், நாட்டின் பல இடங்களில் இருந்து பேரணியாக வந்த கட்சித் தொண்டர்கள் அவருக்கு விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, அங்கிருந்து குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மான் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறத்திலும் நின்ற கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, டாக்காவின் பூர்பச்சல் பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 1971-ல் தமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதைப் போலவே, 2024-ல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியதாக குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையை நினைவுபடுத்தும் வகையில், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னிடம் ஒரு திட்டம் உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், மதம், இனம் கடந்து அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே தனது இலக்கு என்று அவர் உறுதியளித்தார்.

Tags: rousing welcomeformer Prime Minister Sheikh Hasina.Tarique RahmanBangladesh Nationalist PartyTarique Rahman return to homeformer Bangladeshi Prime Minister Khaleda Zia
ShareTweetSendShare
Previous Post

கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் – லக்னோ தேசிய நினைவிட திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies