17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பினார் தாரிக் ரஹ்மான் - உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!
Aug 7, 2026, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பினார் தாரிக் ரஹ்மான் – உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 06:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு திரும்பிய நிலையில், கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி,லண்டனில் வசித்து வந்தார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், வங்கதேசம் திரும்பினார்.

மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேசத்திற்கு விமானம் மூலம் டாக்கா வந்தடைந்தார். இந்நிலையில், நாட்டின் பல இடங்களில் இருந்து பேரணியாக வந்த கட்சித் தொண்டர்கள் அவருக்கு விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, அங்கிருந்து குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மான் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறத்திலும் நின்ற கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, டாக்காவின் பூர்பச்சல் பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 1971-ல் தமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதைப் போலவே, 2024-ல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியதாக குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையை நினைவுபடுத்தும் வகையில், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னிடம் ஒரு திட்டம் உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், மதம், இனம் கடந்து அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே தனது இலக்கு என்று அவர் உறுதியளித்தார்.

Tags: rousing welcomeformer Prime Minister Sheikh Hasina.Tarique RahmanBangladesh Nationalist PartyTarique Rahman return to homeformer Bangladeshi Prime Minister Khaleda Zia
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் – லக்னோ தேசிய நினைவிட திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies