தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை
Jan 29, 2026, 04:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது.

அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: MK StalinTamil Nadu law and orderChennai government arts collegeold women sexually assaultedTamil NadubjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

Related News

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட பதிவுகள் நீக்கம் – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies