திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, எமர்ஜென்சியின்போது ஸ்டாலின் சிறை சென்றதாக கூறுகிறார்கள்;
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக கூட்டணி வைத்துள்ளதாக விமர்சித்தார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிதான் என்ஜின் எனவும் அவருக்கு உதவக்கூடிய இடத்தில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இருப்பதாகவும் எம்.பி தம்பிதுரை தெரிவித்தார்…
















