காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, எப்ஸ்டீன் கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்புபடுத்தி பேசினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்னறிவிப்பின்றி மக்களவையில் முன்வைத்த ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
















