சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?
Apr 17, 2026, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?

Manikandan by Manikandan
Feb 14, 2026, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவராத்திரி முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா….பர்வத மலை மீது ஏற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் உலக பிரசித்தி பெற்ற பர்வத மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் அருள்மிகு ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

பர்வத மலை ஏறும் பக்தர்கள் நலன் கருதியும் மலையேறும் வழிப்பாதை மற்றும் மலை உச்சியில் ஒரே நேரத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பது காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் மலையர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து நடைமுறைக்கு வந்தது.

குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் என்ற அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் மலையேறு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றத்தினாகள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்புகளை அறிவித்தது. குறிப்பாக நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள், உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மலையேற முயற்சிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சிவராத்திரி முன்னிட்டு பர்வத மலை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமான பக்தர்கள் பர்வத மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அறிவிக்கவில்லை. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் அவர்கள் அனைவரும் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி உள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: climb Parvatha Mountainmore devoteesMaha Shivaratri 2026RestrictionsMaha ShivaratriShivaratri.climbing
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச தேர்தலில் இந்து வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி!

Next Post

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies