பெட்ரோல் விநியோகத்தில் தற்போதைய நெருக்கடியை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மிக பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் புகழ்ந்துள்ளார். தூதரக ரீதியிலான உறவுகளில் மத்திய அரசு சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக மற்றொரு காங்கிரஸ் எம்பியான மணிஷ் திவாரி பாராட்டியுள்ளார்.
இக்கட்டான சூழலை மத்திய அரசு திறம்பட சமாளித்து வருவதாகவும், நாட்டில் எங்குமே எரிவாயு தட்டுப்பாடு இல்லை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த சர்மா, கமல்நாத் ஆகியோர் கூறியுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து மேற்காசிய போர் விவகாரமும் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















