சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டமன்றங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் துரதிர்ஷ்டவசமானது எனவும்
இந்த முடிவை தாமதப்படுத்துவது என்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை தாமதப்படுத்துவது போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது என குறிப்பிட்ட பிரதமர், இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் என தெரிவித்தார்.
தேசத்திற்கான பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, இசை மற்றும் கலை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வரும் 16ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
















