தமிழகத்தில் “டபுள் என்ஜின்” அரசு அமைந்தால் மட்டுமே, மத்திய திட்டங்கள் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து கரந்தை பகுதியில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டதாக கூறினார்.
மேலும், தஞ்சை தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள கருப்பு முருகானந்தம் போன்ற தகுதியான வேட்பாளருக்கு “தாமரை” சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
















