தமிழக சட்டபேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலத்தின் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் காரணமாக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழக உள்துறை செயலாளராக செயல்பட்டு வந்த தீரஜ்குமார் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், லஞ்ச ஒழிப்பு டிஜிபி உட்பட முக்கிய அதிகாரிகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















