சேலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் விசைத்தறி இயக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விசைத்தறி இயக்கி அதிமுக நகர செயலாளர் முருகன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து ஜலகண்டாபுரம் சாலை, பெருமாள் கோவில் காலனி, கா.புதூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு , கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
















