தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மசோதாவை அறிமுகம் செய்த பின்னர் பேசிய அவர், நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதன் மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என கூறிய மேக்வால், நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 815-ஆக உயரும் எனவும் தெரிவித்தார். மேலும், எந்தவொரு மாநிலமும் தனது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காது எனவும் அர்ஜுன்ராம் மேக்வால் தெளிவுபடுத்தினார்.
















