மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை மத்திய அமைச்சர் அமித்ஷா சாடினார்.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகளிர் இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கோரினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என தெரிவித்தார். வேண்டுமானால் சமாஜ்வாதி கட்சி தனது அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் என கூறிய அமித்ஷா, அதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
















