முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் அரசியல் செய்கிறார் என தெரிவித்தார்.
தமிழகமோ அல்லது வேறு எந்த மாநிலமோ மசோதாக்கள் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை என கூறிய கிரண் ரிஜிஜூ, அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தவோ, திசைதிருப்பவோ கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும், அனைவருக்கும் நியாயமான வாய்ப்பும், பிரதிநிதித்துவமும் வழங்கப்படும் எனவும் கிரண் ரிஜிஜூ தெளிவுபடுத்தினார்.
















