மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் தரப்பில் திரும்பப்பெற வலுயுறுத்தப்பட்ட நிலையில், விவாதத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிலளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பின்னர் இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மசோதாக்களை தாக்கல் செய்ய ஆதரவாக 251 உறுப்பினர்களும் எதிராக 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
















