மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என தெரிவித்தார்.
தொகுதிகள் சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கூறிய பிரதமர் மோடி அனைவருக்கும் சமமான விகிதாச்சாரம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என உறுதிமொழி வழங்க தயார் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
















