தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாக, பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார்.
மக்களவையில் பேசிய தேஜஸ்வி சூர்யா, கடந்த 1971ம் ஆண்டு 55 கோடியாக இருந்த மக்கள் தொகை, 2026ல் 140 கோடியை தாண்டிவிட்டதாகத் தெரிவித்தார்.
தொகுதி மறு வரையறை செய்யாவிட்டால் மக்களுக்கான திட்டங்களை சரியாக கொண்டு செல்ல இயலாது என்றும், அது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் பிரிவினை வாதம் பற்றி பேசுவது தி.மு.க தான் என்றும், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவினர் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க ஏன் அதிகமாக கூச்சலிடுகிறது? அவதூறு பரப்புகிறது என்பதை பார்த்தால், அது வெறும் முதலை கண்ணீர் மட்டும்தான் என்றும் தேஜஸ்வி சூர்யா சாடினார்.
















