திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்ற மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
அவருக்கு மடத்தின் சார்பாக குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினனார்.
மேலும், ஒட்டுமொத்த ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாகவும், ஸ்டாலின் எது செய்தாலும் அது நாடகம்தான் எனவும் விமர்சித்துள்ளார்.
















