மாநிலம் முழுவதும் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன்களை விநியோகம் செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் 8 ஆயிரம் ரூபாய் போலி கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் அருள்முருகன் என்ற வழக்கறிஞர் முறையீட்டார்.
அதில் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.
















