திமுக ஆட்சியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்திற்காக அனைத்து கருத்துவேறுபாடுகளை மறந்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில், அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
பிரசாரத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் திமுகவிற்கு சென்றதால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், அவர் கடந்த தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்துதான் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.
















