சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் நிதின் நபின் சாலை பேரணி மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மதுரை வருகை தந்தார்.
மதுரை விமானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சாத்தூர் வந்த நிதின் நபின், திறந்த வாகனத்தில் சென்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சாலை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் சரத்குமார், நயினார் நாகேந்திரன் சென்ற நிலையில், சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பாஜகவின் கொடிகளை அசைத்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுங்கிலும் குழந்தைகளை தூக்கி கொஞ்சியும், தனக்கு அணிவிக்கப்பட்ட மாலை மற்றும் துண்டுகளை கட்சியினருக்கு வழங்கியும் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
















