திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், பாஜக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராசிபுரம் தொகுதியில் ஒரு அமைச்சர் இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். திமுகவினர் ஓட்டுக்கு பணம் தருவார்கள் என்றும், அதை வாங்கிக்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
















