செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிக்க சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்றனர்.
இந்நிலையில், வாக்களித்த மக்கள் சென்னைக்கு திரும்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் செஞ்சி நான்கு முனை சந்திப்பு மற்றும் திருவண்ணாமலை சாலையில் நீண்ட நேரமாக குழந்தைகளுடன் வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர். மேலும், சென்னைக்கு திரும்பி செல்ல போதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
















