சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 90.74 சதவீத வாக்குகளும், தருமபுரி மாவட்டத்தில் 90.13 சதவீத வாக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 90.10 சதவீத வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 90.21 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
















