நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் பழங்கால சமூகத்தின் கலாசார நெறிமுறைகள் மற்றும் நாகரீக விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம் எனக் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மேன்மைக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும் மனித சமூக மூலதனத்தை உருவாக்குவதே ஆஎஸ்எஸ்ஸின் நோக்கம் என குறிப்பிட்ட அவர், சமூக சேவை மட்டுமின்றி இயற்கை பேரிடர்களின் போதும் ஆர்.எஸ்.எஸ் நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றியும் ஆர்எஸ்எஸ் பற்றியும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகும் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
















