மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பணிகள் 40 பேர், படகில் சவாரி செய்தனர். அணையின் நடுப்பகுதியில் சென்றபோது திடீரென படகு கவிழ்ந்தது. இதில் 9 நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ், அவரது மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன் உயிரிழந்தனர்.
இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சௌபாக்கியா, அவரது மகன் மயூரன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காமராஜின் மகன் புவிதரன், சௌபாக்கியாவின் மகள் இனியா ஆகியோர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.
















