முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை மக்கள் மாளிகை ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களையும், திமுக கூட்டணி 73 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி திமுக தோல்வி அடைந்த நிலையில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் சொந்த தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.
மக்கள் அளித்த இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ள நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இதனை ஏற்றுக்கொண்டதாக மக்கள் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















