புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
இதனால் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த ரங்கசாமியே மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டணியின் சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி சட்டமன்ற தலைவராக தன்னை தேர்வு செய்துள்ளதாகவும், துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















