முதலமைச்சராக பதவியேற்ற விஜய், விழா மேடையிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கான 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். பதவியேற்பு விழா நிறைவடைந்ததும், விழா மேடையிலேயே அவர் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்
பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையை உருவாக்கும் திட்டத்தில் அவர் கையெழுத்திட்டார். மூன்றாவதாக போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் விஜய் கையெழுத்து இட்டார்.
















