எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என்று பேச ஆரம்பிக்க வேண்டாம் என்றும், மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சி திறமையும்தான் வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிதாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன் எனக் கூறியுள்ள அவர், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என்று பேச ஆரம்பிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சி திறமையும்தான் வேண்டும் எனக் தெரிவித்துள்ள ஸ்டாலின், கோவிட், வெள்ளம் போன்ற பிரச்னைகளின்போது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் அளவு இருக்கிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள விஜய், கூடிய விரைவில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வார் என கூறியுள்ளார்.
















