தமிகத்தின் 13வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்தில் இருந்து கான்வாய் வாகனங்கள் புடைசூழ தவெக தலைவர் ஜோசப் விஜய் புறப்பட்டார். இதனை தொடர்ந்து, விழா அரங்கிற்கு வந்த விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு தவெக தலைவர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதவியேற்பு விழாவில் விஜய் வெள்ளை சட்டை, கருப்பு கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.
பின்னர் விழா மேடைக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய், அமைச்சர்களாக பொறுப்பேற்கும் 9 பேரும் வருகை புரிந்த நிலையில், வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது.
இதனை அடுத்து, தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்று கொண்டபோது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
இதனை தொடர்ந்து, ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
















