முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மிக முக்கியமான நியமனங்களை மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் முதலமைச்சரின் முதல்நிலை தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமிபிரியா முதலமைச்சரின் 2ஆம் நிலை தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
















