நீட் மோசடியில் தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிந்ததாக புனேவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பித்த சிபிஐ வினாத்தாள் கசிவிற்கும், தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்த சிபிஐ சம்பவத்தில் வேறு எந்த அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
















