அமெரிக்கா – ஈரான் மோதலை தடுப்பதில் இந்தியாவால் மட்டுமே முக்கிய பங்காற்ற முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய லாவ்ரோவ், இந்த விவகாரத்தில் இந்தியா சிறந்த மத்தியஸ்தராக செயல்பட முடியும் என குறிப்பிட்டார்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை தீர்ப்பதில் பாகிஸ்தான் உதவினாலும், நீண்ட கால தீர்வுக்கு இந்தியாவின் ராஜதந்திர அனுபவமே கைகொடுக்கும் என்றும் கூறினார். அமைதியை நிலைநாட்ட ஈரான் – அரபு நாடுகளுக்கு இடையே இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.
















