பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் பள்ளி மற்றும் வழிபாட்டு இடங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடப்பட்டன
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
அதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது
மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அருகே மதுவிற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம். கள்ளச்சாராயம் தயாரித்தல், போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம். போதைப்பொருள் மீட்புத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
















