திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரின் வருகைக்காக கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் தினந்தோறும் மதியம் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம், இதற்கிடையே அமைச்சரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான சி.டி.நிர்மல்குமார் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகை தந்தார்.
இவரின் வருகைக்காக நீண்ட நேரம் நடை அடைக்கப்படாமல் இருந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு தாமதமாக அமைச்சர் வந்த போது கோயில் துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அவரை வரவேற்றனர். சுவாமி தரிசனம் செய்த அவர் 1.30 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறிய உடன் கோயில் நடை அடைக்கப்பட்டது,
பல்வேறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஆகம விதிகள் அமைச்சரின் வருகைக்காக மீறப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















