இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.
பொல்கஹவெல ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. களனி மற்றும் வனவசல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது ரயிலானது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. இதில், ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கவாட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரதான பாதை வழியாக செல்ல வேண்டிய அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில் பெட்டியை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
















