ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
காக்கிநாடா ரூரல் காவல் எல்லைக்குட்பட்ட கொவ்வூர் பாலம் அருகே கூலித் தொழிலாளர்கள் சிலர் வேலைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
இதில் கூலி தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சென்ற போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















