பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தையொட்டி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றிருந்தார். இதையொட்டி, நெதர்லாந்தில் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
மொத்தம் 30 கிலோ எடை கொண்ட இந்த ஆவணத்தில், 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள உள்ளன. இவை அனைத்தும் ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ அரச முத்திரையைக் கொண்ட ஒரு வட்ட வடிவ செப்பு வளையத்தால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை சோழர் கால வரலாற்றை எடுத்துரைக்கிறது.
















