டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் FL1 கடைகள் இரவு 10.00 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்றும், FL2 கடைகள் இரவு 11.00 மணிக்குள்ளும், FL3 கடைகள் நள்ளிரவு 12.00 மணிக்குள்ளும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரக்கட்டுப்பாடுகளை Patrol, Gipsy Patrol, Additional Patrol மற்றும் Sector Beat Officers நேரடியாக கண்காணித்து, புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“Loose Selling” முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட ரோந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் முன்மொழிவுகளை உதவி ஆணையர்கள் முறையாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SC/ST வழக்குகள் காவல் ஆணையரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும், Singappenn Team மற்றும் Anti Narcotic Team செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pink Patrol வாகனங்கள் பெண்கள் பாதுகாப்பு ரோந்துப் பணிகளுக்காக முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி, ஒழுங்குடனும் திறமையுடனும் பணியாற்ற அனைத்து காவல்துறையினருக்கும் சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
















