உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது தலைமை நீதிபதியை சேர்த்து 34 ஆக உள்ளது. இதனை 38 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு சமீபத்தில் முடிவு செய்து, அதனை முன்மொழிந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 1956 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டம், 2026-ல் திருத்தப்பட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த அவசர திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
















