அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏவை தவெகவினர் அபகரித்துள்ளனர் என தெரிவித்தார்.
அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறிய விஜய்யை அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிப்பது நியாயமா? என்றும், இன்னொரு தேர்தல் வந்துவிடும் என்பதற்காக சில கட்சிகள் ஆதரவு அளித்தது தர்மத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
தவெக ஆட்சியின் ஆயுள் காலம் ஊசலாகி கொண்டிருக்கிறது என்றும், விஜய்யை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் முடிவு அவர்களையே பாதிக்கும் என கூறினார்.
அரசியல் கட்சியின் தலைவர் தான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும் என்றும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
















