பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் அதன் கிளை சிறைகளில் பணியாற்றும் 26 காவலர்களை வேறு சிறைகளுக்கு மாற்றி சிறைத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் மாவட்ட சிறைகள் மற்றும் பல்வேறு கிளை சிறைகள் இயங்கி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாளை மத்திய சிறை அதிகாரி செந்தாமரை கண்ணன் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, பாளை மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் பணியாற்றும் 26 முதல் நிலை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . விடுப்பில் உள்ள காவலர்கள் விடுப்பு முடிந்து வந்ததும் புதிய இடத்தில் சேர வேண்டும் என்றும், மற்ற அனைவரும் உடனே புதிய பணியில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மூடிய சிறைக்கு காவலர்களை மாற்றியது குறித்து சர்ச்சைக்கும் சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
















