சென்னையில் ஒரே நாள் இரவில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சென்னையின் முக்கிய காவல் மண்டலங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு முழுவதும் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.நகரில் 18 ரவுடிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகள், புளியந்தோப்பில் 20 ரவுடிகள், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ரவுடிகளை ரகசிய இடங்களில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















