மின்சார வாகனங்கள் பயன்படுத்த ஊக்கத்தொகை : ரூ.8,300 கோடி வழங்கும் மத்திய அரசு - சிறப்பு கட்டுரை!
Aug 5, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகனங்கள் பயன்படுத்த ஊக்கத்தொகை : ரூ.8,300 கோடி வழங்கும் மத்திய அரசு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை மின்சார வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்திய நிலையில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பிரதமர் மோடி பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன என்றாலும், அவற்றில் சுமார் 5 சதவீதம் மட்டுமே அரசு பேருந்துகளாகும்.

நாட்டின் சிறிய நகரங்களுக்கும் மின்சாரப் பேருந்து நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதன் மூலம், சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்குள் இந்தியா எரிசக்தி தன்னிறைவு பெற்ற நாடாகும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

மின்சாரப் பேருந்துகள், மூன்று சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக இருசக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

ஃபேம் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள், 10 லட்சம் இருசக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.

மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களின் முன்கூட்டிய கொள்முதல் விலையைக் குறைப்பதன் வடிவத்தில் e-2W மற்றும் e-3W வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்குகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டைப் பெருமளவில் அதிகரிப்பதற்கான அடித்தளத்தை இந்தியா அமைத்துள்ளது.

பிரதம மந்திரி-மின்சாரப் பேருந்து சேவைத் திட்டத்தின் கீழ் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒன்பது முக்கிய நகரங்களில் 14,000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன .

இப்போது ​​50-க்கும் மேற்பட்ட நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 20,000 மின்சாரப் பேருந்துகள் கொள்முதலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்தச் சூழலில் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85க்கும் மேல் இறக்குமதி செய்துவரும் இந்தியாவிலும் ஈரான் போரின் தாக்கம் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, தனது சிறப்பு பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்துள்ளார்.

தொடர்ந்து மாநில முதல்வர்கள், ஆளுனர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் பிரதமர் மோடியைப் பின்பற்றி தங்கள் சிறப்பு கான்வாயில் வாகன என்ணிக்கையைக் குறைத்துள்ளனர்.

எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும், நகர்ப்புறக் காற்று மாசுபாட்டைக் கையாளவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அடுத்த பத்தாண்டுகளில் தனியார் துறையில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் டீசல் பயன்பாட்டில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள தனியார் வர்த்தக வாகனங்கள், நகரங்களுக்கு இடையேயான பேருந்து நிறுவனங்களுக்கான திட்டம் இதுவாகும்.

ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் முழுவதும் அதற்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு யோசித்துவருவதாக கூறப் படுகிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கான மின்சார வர்த்தக வாகனங்கள் வாங்குவதற்கு நிதியளிக்க ஒரு பகுதி கடன் உத்தரவாத வழிமுறையையும் அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

Tags: three-wheeled electric vehiclesprime minister modiElectric Vehiclesincentives exceeding $1 billion for electric busesgovernment-owned buses.
ShareTweetSendShare
Previous Post

வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!

Next Post

தவெக, திமுக, அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி; பின்னணி இதுதான் ?

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies