கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும்,
சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், டாஸ்மாக் கடையை ஆய்வு செய்யச் சென்றபோது, டாஸ்மாக் ஊழியர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொகுதி மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவிக்கச் சென்ற பிரேமலதா விஜயகாந்த், திடீரென அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்யச் சென்றார்.
அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் ஷட்டரை மூடிவிட்டு உள்ளே சென்றனர். நீண்ட நேரம் வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.
பின்னர் வெளியே வந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர், இந்த கடையை மாற்று இடத்தில் வைக்க இடம் பார்த்து வருவதாகக் கூறினார்.
















