சூலூர் அருகே சிறுமி கொலை சம்பவத்திற்கு அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சிறுமி கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது எனவும். பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், சிங்கப் பெண் படை போன்ற சிறப்புக் காவல் படைகளை அமைத்திருந்தாலும், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















