குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு விடுதலையான யூடியூபர் சவுக்கு சங்கர், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சி மற்றும் சில அதிகாரிகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்ததற்காக சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை அரசு ரத்து செய்தது.
அதன்படி, புழல் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேட்டியளித்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் விஜய் உத்தரவால் விரைவில் விடுதலை ஆனதாக நன்றி தெரிவித்தார். திமுக போல் கொடூரமான கட்சி எந்த காலத்திலும் இருக்க முடியாது என விமர்சித்த அவர், விஜய் ஆட்சியில் ஊடக சுதந்திரம் சிறப்பாக செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.
















